‘பல விருதுகள் பெற தகுதியுள்ள படம்’… “வாழை” படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன், ”மிகவும் நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போல உணர்வை ஏற்படுத்துகிறது. வாழை என்னுடைய மிகவும் பிடித்தமான படம். பல விருதுகள் பெற தகுதியுள்ள படம்” என பாராட்டியுள்ளார்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!