பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்….!!!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும் பொதுவெளியில் பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது எனவும் அதிமுக அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் அதிமுகவை தொடர்ந்து பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறுவதாக அக்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், NDA, INDIA என்று எந்த கூட்டணியிலும் பங்கேற்காமல் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!