மத்திய பிரதேசத்தின் ஷாபூரில் உள்ள ஹர்தெளல் பாபா கோவிலில் மதவிலா நடந்துள்ளது. அப்போது அந்த கோவிலில் இருந்த குழந்தைகள் மீது கோவிலின் சுவர் இடிந்துள்ளது. இதனால் விபத்தில் காயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று ரேவா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் பலியாகினர். இதனால் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.