பாரிஸில் ஒலிம்பிக்…ஸ்ரீஜா அகுளா காலிறுதி முந்திய சுற்றுக்கு தகுதி….!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி சிந்து இரண்டாவது சுற்றில் வென்றார்.

அதேபோல் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் இரண்டாவது சுற்றில் வென்றார். இந்நிலையில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் ஸ்ரீஜா அகுளா, சிங்கப்பூர் வீராங்கனை செங் ஜியான் உடன் மோதினார். இதில் அகுளா 4-2 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!