Home செய்திகள்உலக செய்திகள் பாலஸ்தீனம் கடிதம்…ஒலிம்பிக் கமிட்டி சங்கம் பதில்…!!!

பாலஸ்தீனம் கடிதம்…ஒலிம்பிக் கமிட்டி சங்கம் பதில்…!!!

by Sathya Deva
0 comment

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11 வரை ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களும் அதேபோன்று பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் 8 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் வீரர்களை ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலக்க கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது சட்டவிரோதமானது என ஐநா சபையின் உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் கூறியிருந்தது.

இந்த கடிதத்தை ஒலிம்பிக் கமிட்டி சங்கம் நிராகரித்து உள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கழகத்தின் தலைவர் தாமஸ் பாக் கூறியதில் ஐ ஓ சி யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்களிடம் இரண்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் உள்ளன. இது அரசியல் உலகத்துடனான வித்தியாசம். இந்த வகையில் இருவரும் அமைதியான சகவாழ்வில் வாழ்ந்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல. ஆனால் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஆகும்.மேலும் மற்ற அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளை போலவே சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.