பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு….தூக்கு தண்டனை….முதல்வர் மம்தா பானர்ஜி…!!!

மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பேரணியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அடுத்த வாரம் கூடும் சட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு, மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராடிவரும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!