Home செய்திகள்உலக செய்திகள் பாலியல் வன்முறை…கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து…!!!

பாலியல் வன்முறை…கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து…!!!

by Sathya Deva
0 comment

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த புள்ளிவிபரம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. இந்தியாவில் தினமும் 86 பாலில் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மணி நேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என கூறியுள்ளார். மேலும் அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.