புதிய கட்சியை தொடங்கினர் …..பிரசாந்த் கிஷோர்….!!!

தேர்தல் வியூக நிபுணர்களின் முதன்மையானவராக கருதப்படுபவர் ரோகிஸ்தா மாவட்டத்தை சேர்ந்த “பிகே” என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில் புதிய கட்சி வரும் அக்டோபர் 2 தேதி தொடங்கப்படும் என்றும் தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும் என கூறியுள்ளார் . நான் கட்சி தொடங்கிய முதல் நாளிலே ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும் என்பதையும் புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி, குடும்பம் அல்லது சமூகத்திற்குள் நின்று விடாது இது பிகார் மக்களின் கூட்டு முயற்சி என்று கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!