Home செய்திகள் பேரனை அடித்த மகன்…. துப்பாக்கியால் சுட்ட தாத்தா…. நாக்பூரில் பரபரப்பு….!!

பேரனை அடித்த மகன்…. துப்பாக்கியால் சுட்ட தாத்தா…. நாக்பூரில் பரபரப்பு….!!

by Inza Dev
0 comment

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சிந்தாமணி நகரில் முதியவர் ஒருவர் மகன் மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் வங்கி ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அப்பொழுது மகனும் மருமகளும் தனது பேரனை அடிப்பதை பார்த்து கோபம் அடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் மிகுந்த கோபம் அடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகனின் காலில் சுட்டு உள்ளார். இதனால் அவருக்கு காலில் குண்டு பாய்ந்து கதறிய நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியோரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அவரது மகனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.