தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அதிக போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிட தொழிலாளிகளான சௌந்தரராஜன், பாலகுரு ஆகிய இருவரும் இன்று காலை வேலைக்குச் செல்லும் முன் மதுவுடன் சானிடைசர் கலந்து அருந்தியுள்ளனர். அதன்பின் சிறிது நேரத்தில் மயக்கமான அவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.