Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! வெற்றி வாகை சூடுவீர்கள்…!! காரியதடை விலகும்…!!

மகரம் ராசிக்கு…! வெற்றி வாகை சூடுவீர்கள்…!! காரியதடை விலகும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! எதிலும் மனநிறைவாக காணப்படுவீர்கள்.

பிறருக்கு உதவி புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தன வரவு கிடைக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். எதிலும் எச்சரிக்கையாக செயல்பட்டு வெற்றி வாகை சூட முடியும். காரிய தடை விலகும். எதிலும் சாதகமான நல்ல பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சினை கட்டுக்குள் வரும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளால் மணமகிழ்ச்சி உண்டாகும். பெரியவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர சகோதரிகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். பெண்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

பெண்களுக்கு சுய கவுரவம் ஏறும் நாள். காதல் பிரச்சினையை கொடுக்காது மனம் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் வெற்றி பெற கொஞ்சம் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்கள் தடபுடலாக எந்த ஒரு முடிவுக்கு வர வேண்டாம். நன்கு படியுங்கள் படித்த பாடங்கள் எழுதி பாருங்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வருங்க நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.