மத்திய பட்ஜெட் தாக்கல்…இவ்வளவு மாற்றங்களா…!!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 2ம் தேதி வரை இந்த கூட்டம் நடக்கிறது. இன்று ( ஜூலை 23 )காலை துவங்கிய பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இவரது உரையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் புதிய தனிநபர் வருமான வழிமுறை அமைப்பை ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை இதுவரை இருந்து 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும் என கூறினர். தாமதமாக வரி தாக்குதல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது என கூறியுள்ளார்.

தொழில் முதலீட்டில் ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது எனவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீதத்திலிருந்து 35 ஆக குறைக்கப்படும் எனவும் ஆன்லைன் வர்க்கத்திற்கு வரியும் குறைக்கப்படுகிறது. நடப்பு நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூபாய் 14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணை வர்க்கத்திற்கான TDS 11% குறைக்கப்பட்டுள்ளது. நீண்டகால மூலதன ஆதாயவரி 10 சதவீதம் இருந்து 12.5 ஆக அதிகரிக்கப்படுகிறது. மாத வருமானம் பெறவருக்கான டிடக்சன் 50,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயரப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு மூன்று முதல் ஏழு லட்சம் மைலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையான வருமானத்திற்கு 10 சதவீதம் வரையும் விதிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 லட்சம் வரை வருமானத்திற்கு 15 சதவீதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானத்திற்கு 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!