Home செய்திகள் மாணவர்களுக்கு முடிவெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட்….மாவட்ட கல்வி அலுவலகம்….!!!

மாணவர்களுக்கு முடிவெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட்….மாவட்ட கல்வி அலுவலகம்….!!!

by Sathya Deva
0 comment

தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் பெரமவஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சிரிஜா என்ற ஆங்கில ஆசிரியர் வேலை செய்து வருகிறார். அவர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வரவேண்டும் என பலமுறை வலியுறுத்தினார். ஆனாலும் மாணவர்கள் ஆசிரியர் கூறும் அறிவுரை ஏற்காமல் புள்ளிங்கோ கட்டிங், நீண்டதலை முடியுடன் பள்ளிக்கு வந்தனர்.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ஆசிரியர் கத்திரிக்கோலை எடுத்து வந்து பத்து மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார். அப்போது உணவு இடைவெளியில் வீட்டிற்கு சென்ற மாணவர்களின் தலையை கண்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். பின்பு பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்த்தில் ஈடுபட்டன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதான பேசி அனுப்பி வைத்தனர். இதை அடுத்து மாணவர்களுக்கு முடிவெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.