முண்டகை நீர்வீழ்ச்சியில் உயிருக்கு போராடும் 3 பேர்…கடலோரக் காவல் படையினர் கண்டுபிடிப்பு…!!!

முண்டகையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூழ்ச்சி பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள பாறைகளில் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த நீர் வீழ்ச்சில் வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அந்த மூன்று பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மூன்று பேரையும் மீட்பதற்காக வாய்ப்பு குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மூன்று பேரில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!