Home செய்திகள் மும்பை மருத்துவமனையில்…பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு…!!!

மும்பை மருத்துவமனையில்…பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு…!!!

by Sathya Deva
0 comment

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சியான் மருத்துவமனையில் இன்று அதிகாலை3.30 மணியளவில் முகத்தின் காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. காயங்களுடன் வந்த நபருடன் உறவினர்களும் வந்தனர். அந்த உறவினர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆறு பேரும் பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றனர். அவர்களிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்கு சில காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்பு அந்த இடத்தில் இருந்து அது ஆறு பேரும் தப்பி சென்று விட்டனர். இதை எடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் மும்பையில் இரவு பணியின்போது மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.