Home செய்திகள் மோமோஸ் இயந்திரத்தில் சிறுமி பலி…டெல்லியில் நடந்த பரிதாபம்…!!!

மோமோஸ் இயந்திரத்தில் சிறுமி பலி…டெல்லியில் நடந்த பரிதாபம்…!!!

by Sathya Deva
0 comment

டெல்லியில் உள்ள பேகம்பூர் ஹனுமான் சவுத் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் மோமோஸ் மற்றும் ஸ்பிரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் மோமோஸ் இயந்திரத்தை இயக்கிய 15 வயது சிறுமியின் கை உள்ளே மாட்டி க்கொண்டு அவர் தலையோடு இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிறுமி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறினர். கடந்த மூன்று வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தின் சமையல் வேலை உதவியாளராக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை வேலைக்கு வைத்த ராஜேஷ் குமார் என்பவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.