Home » யார் அவர்…?கமிஷனருக்கு வந்த ஃபோன் கால்…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

யார் அவர்…?கமிஷனருக்கு வந்த ஃபோன் கால்…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

by Gayathri Poomani
0 comment

மயிலாடுதுறை பகுதியில் இருக்கும் காந்திஜி சாலைக்கும் பட்டமங்கல சாலைக்கும் சந்திப்பு பகுதியில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்திருக்கிறது. இதை இம்மாவட்டத்தின் நினைவு கோபுர தூணாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம நபர் தொலைபேசியில் அழைத்துள்ளனர். அதில் பேசிய மர்ம நபர் மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டுகள் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் நாகை மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மணிக்கூண்டு கோபுரத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனை முடிவில் எதுவும் கிடைக்கவில்லை இது ஒரு தவறான தகவல் என தெரியவந்துள்ளது. மேலும் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியவர் யார்? அவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் காரணத்தினால் மணிக்கூண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.