ராகுல் காந்தியை சந்தித்தார்…மனு பாக்கர்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 200-க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது ஒலிம்பிக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி திரும்பிய மனுபாக்கர் பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அறையில் ராகுல் காந்தியை தனது குடும்பத்தினருடன் இன்று சந்தித்தார். அப்போது இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!