ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள பிரபல நகை கடைக்குள் நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் 5 பேர் கடைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது அப்போது கடையில் இருந்தவர்களை மர்ம கும்பல் சரமாறியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய்சிங் என்பவர் உயிரிழந்தார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த 5 நபர்களை வலை வீசி தேடி வருவதாக கூறியுள்ளனர். வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.