ரிஷபம் ராசிக்கு…! நல்ல செய்திகள் வீடு தேடி வரும்…! உபரி பண வருமானம் கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! நாள்பட்ட வியாதியில் இருந்து குணமாகுவீர்கள்.

மூன்று நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாய்வு அதிகம் ஏற்படுத்திய உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த காரிய வெற்றி கண்டிப்பாக உண்டாகும். நல்ல செய்திகள் வீடு தேடி வரும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பு பாசத்தால் மகிழ்வீர்கள். சிறு உபாதைகளாக இருந்தாலும் அடுத்தவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். எதிர்பாராத திருப்பங்கள் வரும். மனதிற்கு இனிய செய்திகள் வரும். தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள். கணவன் மனைவியுடைய நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றி கொடுப்பீர்கள். எதிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கூடும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். முன் கோபமாக யாரிடமும் பேச வேண்டாம்.

காதலைப் பொறுத்தவரை அவசரப்பட வேண்டாம் சந்தேகப்பட வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள் பொறுமையாக இருங்கள். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். விளையாட்டு புத்தியாக காணப்படுவீர்கள். ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நன்கு படியுங்கள் முன்னேறுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதும் பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!