Home செய்திகள்உலக செய்திகள் வங்காளதேசம்…கலீதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு…!!!

வங்காளதேசம்…கலீதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு…!!!

by Sathya Deva
0 comment

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும் ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் வங்காளதேசம் பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மேலும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.