வங்காளதேசம்….வன்முறையால் 29 பேர் பலி…!!!

வங்காளதேசத்தின் நடந்த வன்முறையில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அக்கட்சி தலைவர்களின் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடி வீடுகளுக்கும் தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமிலீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29 மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். சத்கிராவில் அவாமி லீக் தலைவர்களில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டன. மேலும் 4 பேர் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போக்ராவில் உள்ள அவாமில் லீக்கின் இரண்டு தலைவர்களின் உடல்களை கண்டெடுத்தனர் என கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!