Home செய்திகள் வயநாட்டில் கனமழை…ராகுல் காந்தி பயணம் ரத்து…!!!

வயநாட்டில் கனமழை…ராகுல் காந்தி பயணம் ரத்து…!!!

by Sathya Deva
0 comment

கேரளாவில் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். ஆனால் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது இணையதள பக்கத்தில் கூறியது வயநாட்டுக்கு சகோதரி பிரியங்கா உடன் நேரில் சென்று ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தேன். ஆனால் கனமழை மோசமான வானிலை காரணமாக நாங்கள் அங்கு செல்ல இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர் எனவும்கூறினார். நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் வயல்நாட்டில் உள்ள சூழ்நிலைகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.