செய்திகள் மாநில செய்திகள் வாலிபரின் வயிற்றில் சுரைக்காயா…?அதிர்ந்த மருத்துவர்கள்…!!! Sathya Deva24 July 20240116 views மத்திய பிரதேசம் மாநிலம் சட்டப்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் மயக்கம் நிலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்து பார்த்தபோது ஒரு நீண்ட பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்பு அவருக்கு ஆபரேஷன் செய்து அவருடைய வயிற்றில் ஒரு அடி சுரைக்காய் இருந்தாக கூறியுள்ளார். மேலும் அவரின் வயிற்றில் அந்த சுரைக்காய் இருந்ததால் அவரின் பெருங்குடல் கிழிந்தது அதனை மருத்துவர்கள் சிகிச்சை செய்து சரி செய்தனர். அந்த சுரைக்காய் வாலிபரின் ஆசனவாய் வழியாக அவருடைய உடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. வாலிபர் தற்போது சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். அந்த வாலிபருக்கு சுயநினைவு வந்தால் மட்டுமே என்ன நடந்தது என கூறமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.