விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீ விபத்து…மூன்று பெட்டிகள் சேதம்…!!!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் மூன்று ஏசி பெட்டிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த ரயிலில் பி6, பி7, எம்1 ஆகிய மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சத்தீஸ்கரில் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!