Home விளையாட்டுகிரிக்கெட்20 ஓவர் வெல்லப்போவது எந்த அணி… நெல்லை-திருச்சி… விறுவிறுப்பாக நடைபெறும் டி.என்.பி.எல். கிரிக்கெட்…!!

வெல்லப்போவது எந்த அணி… நெல்லை-திருச்சி… விறுவிறுப்பாக நடைபெறும் டி.என்.பி.எல். கிரிக்கெட்…!!

by Revathy Anish
0 comment

தமிழகத்திற்கான டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி சேலத்தில் தொடங்கி முதற்கட்ட போட்டிகள் முடிவடைந்தது. 2-வது கட்ட போட்டிகள் கோவையில் 13 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது. இதுவரை 17 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கோவை கிங்ஸ் 8 புள்ளியுடன் முதல் இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நெல்லை ராயல் கிங்ஸ் 5 புள்ளியுடன் மூன்று இடத்திலும் உள்ளது.

இதனையடுத்து 4,5,6 வரிசையில் திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன், சேலம் ஸ்பார்டேன்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் 3-வது கட்ட போட்டிகள் இன்று (20) முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நெல்லை இந்தியா சிமெண்ட் மைதானத்தில் வைத்து 7.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. முதல் போட்டியில் நெல்லை மற்றும் திருச்சி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போவது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.