ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக தன்னுடன் படித்த சிறு வயது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் திங்கட்கிழமை என்று ஹோட்டலில் பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் அவரின் நண்பர்கள் மூவரும் மது அருந்திய நிலையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடினர்.
இந்நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து தனது அண்ணனுக்கு அந்தப் பெண் நடந்தது குறித்து போன் மூலம் தெரிவித்தார். பின்பு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய பெண்ணின் நண்பனை தேடி பிடித்து போலீசார் கைது செய்து உள்ளனர் என கூறப்படுகிறது.