மேலும் 11 தமிழக மீனவர்கள் கைது… சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடற்படையினர்…!!

நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் பருத்தித் துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரையும் கைது செய்து அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதை அடுத்து மீனவர்கள் 11 பேரையும் காங்கேஷன் துறைக்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!