Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கோயம்புத்தூர் 16 வயது சிறுமி காதல் திருமணம்… புதுமாப்பிள்ளை உடனடி கைது… போலீசார் விசாரணை…!!

16 வயது சிறுமி காதல் திருமணம்… புதுமாப்பிள்ளை உடனடி கைது… போலீசார் விசாரணை…!!

by Revathy Anish
0 comment

கோவை அருகே 16 வயது சிறுமி ஒருவருக்கும் 24 வயது வாலிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தை னால அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து போலீசார் சிறுமி மற்றும் வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் சிறுமி மற்றும் வாலிபர் நெருங்கிய உறவினர்கள் என்றும் அவர்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வாலிபர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை காப்பகத்தில் ஒப்படைப்பதா அல்லது பெற்றோருடன் அனுப்புவதா என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.