கரூர் செய்திகள் மாவட்ட செய்திகள் 2 நாட்கள் தீவிர விசாரணை… எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்…!! Revathy Anish25 July 2024060 views 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களாக அவரிடம் கரூர் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று நீதிமன்றம் அளித்த 2 நாட்கள் அனுமதி முடிவடைந்த நிலையில் மீண்டும் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.