“சென்னை- டெல்லி”… 4 இண்டிகோ விமானங்கள் ரத்து… முன் அறிவிப்பு இல்லாததால் பயணிகள் அவதி…!!

சென்னையில் இருந்து டெல்லி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸின் 22 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக டெல்லியில் சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது மேற்கூரையை சீர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 2 விமானங்கள், சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் 2 விமானங்கள் என 4 விமானங்கள் ரத்து செய்ப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னை-டெல்லி இடையேயான 18 விமானங்கள் 30 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக வந்து சென்றது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு முன்னதாக தெரிவிக்காததால் அவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!