தூக்கில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி பெண்… தாய் அளித்த பரபரப்பு புகார்… ராஜபாளையம் அருகே சோகம்…!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி(21) என்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளடைவில் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். நந்தினி தனது கணவர் மற்றும் மாமியாருடன் ராஜபாளையத்தில் உள்ள இ.எஸ்.ஐ காலனியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இவருக்கும், இவரது மாமியார் காஞ்சனாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் பலமுறை தனது தாயிடம் மனமுடைந்து பேசியதாக தெரிகிறது. சம்பவத்தன்று நந்தினி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படியில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!