செய்திகள் தேசிய செய்திகள் 15 நாட்களில் இடிந்த 7 பாலங்கள்… ஆய்வு மேற்கொண்ட அதிகார்கள்… பீகாரில் பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish4 July 202408 views 1982-83-ஆம் ஆண்டியின் பீகார் மாநிலம் சிவன் மாவட்டம் கண்டகி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. சில நாட்களாக அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென அந்த பாலம் இடிந்தது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் பீகார் மாவட்டம் முழுவதிலும் 15 நாட்களில் சுமார் 7 பாலங்கள் இடிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பீகார் அரசு உயர்நிலை குழுவை அமைத்து ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.