கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் 7 ஆண்டுகளாக நடந்த பாலியல் வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு… தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…!! Revathy Anish16 July 2024036 views கோவை போத்தனூர் பகுதியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து குழந்தை நல அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜ்க்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.