Home செய்திகள் 822 கோடி ரூபாய் பாக்கி… மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீல்…வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை…!!

822 கோடி ரூபாய் பாக்கி… மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீல்…வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை…!!

by Revathy Anish
0 comment

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பிற்க்கான குத்தகை காலம் 1978-ல் முடிந்துள்ளது. அதன் பிறகு கிளப் சார்பில் ரூ 822 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதற்கு அரசு கிளப் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளித்தும் அவர்கள் பதில் அளிக்காததால் 2006-ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அரசுக்கு சொந்தமான 52.4 ஏக்கர் குதிரை பந்தய மைதானத்தை மீட்டனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது ரேஸ் கிளப் 822 கோடி குத்தகை பணத்தை செலுத்தாததால் வருவாய்த்துறை அதிகாரிகள் கிளப்பிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.