தமிழகத்தில் நான்கு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது எக்ஸ் வலைதளத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.