Home செய்திகள் தொடர்ந்து 4 நாள்… சதுரகிரி மலைக்கோவிலுக்கு அனுமதி… குவியும் பக்தர்கள்…!!

தொடர்ந்து 4 நாள்… சதுரகிரி மலைக்கோவிலுக்கு அனுமதி… குவியும் பக்தர்கள்…!!

by Revathy Anish
0 comment

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க படுகின்றனர்.

இந்நிலையில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அடுத்தடுத்து வருவதால் இன்று முதல் 22-ஆம் தேதி வரை கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று காலை 6 மணியில் இருந்து வனத்துறை சோதனைக்கு பிறகு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதிக்கப்பட்டனர். மேலும் நாளை மற்றும் மறுநாள் ஆடி பவுர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.