Home செய்திகள் தமிழகத்திற்கு மது விற்பனை…. குண்டாஸ் வழக்கு போடப்படும்…. புதுச்சேரிக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்திற்கு மது விற்பனை…. குண்டாஸ் வழக்கு போடப்படும்…. புதுச்சேரிக்கு எச்சரிக்கை….!!

by Revathy Anish
0 comment

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மது விற்பனை செய்தால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்ததை கண்டித்து மதுக்கடை உரிமையாளர்கள் துணை ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடை உரிமையாளர்களிடம் புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மதுபானம் விற்பனை செய்தால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மேற்கு பகுதி எஸ்.பி எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மதுபான கடை உரிமையாளர்கள் கலால் துறை துணை ஆளுநரிடம் தங்களின் மதுபான கடை உரிமத்தை ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.