Home செய்திகள் பெங்களூரில் பிராண்டட் ஷூக்கள் திருடு…மதிப்பு 10 லட்சமா..!!

பெங்களூரில் பிராண்டட் ஷூக்கள் திருடு…மதிப்பு 10 லட்சமா..!!

by Sathya Deva
0 comment

பெங்களூரில் கடந்த ஏழு ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை இரண்டு திருடர்கள் திருடி வந்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்கள் வீட்டை சோதனை செய்தனர். அப்போது 715க்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 10 லட்சம் என கூறப்படுகிறது. இவர்கள் இரவு நேரங்களில் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் அவர்களது கைவரிசைகளை காட்டியுள்ளனர்.

இவர்கள் திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் விற்றதாவும் தகவல் கிடைத்துள்ளது. அண்மையில் வித்யாரண்யபுரம் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஷுக்கள் மற்றும் 2 கேஸ் சிலிண்டர்களை இவர்கள் திருடி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.இதைப் பற்றி விட்டு உரிமையாளர் புகார் கொடுதத்தர். அப்போது காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய செய்தனர். அதில் குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ விபரங்களை கண்டறிந்து இரண்டு திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.