Home செய்திகள் இந்தியா-சீனா எல்லை பெயர்மாற்ற கோரிக்கை….பா.ஜ.க எம்.பி.டொர்ஜீ

இந்தியா-சீனா எல்லை பெயர்மாற்ற கோரிக்கை….பா.ஜ.க எம்.பி.டொர்ஜீ

by Sathya Deva
0 comment

எல்லை பிரச்சினைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியா- பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடாக சீனா இருக்கிறது. இதில் திபேக், லடாக் எல்லா பிரதேசங்களிலும் ராணுவ நடமாட்டத்தை அதிகரிப்பது மற்றும் சீன வரைபடத்தின் இந்திய பகுதிகளின் பெயர்களை மாற்றுவது என தொடர்ந்து இந்தியாவை சீனா சீண்டி கொண்டு வருகிறது. இருநாட்டு வெளியுறவுத்துறையினரும் அவ்வபோது பேச்சுவார்த்தை நடத்தியும் சீனா கட்டுபடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த மக்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா லைன் ஆப் கண்ட்ரோலில் உள்ள பகுதியை இந்திய சீன எல்லை என்று குறிப்பிடாமல் தீபெத் எல்லை என்று சட்டபூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதில் லடாக், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என தீபத் வரை 1400 கிலோ மீட்டர் எல்லை பகுதி நீண்டு உள்ளது. இது சீன எல்லை கிடையாது திபெத் எல்லை என்று குறிப்பிடுகிறார். இதற்கிடையில் நேற்று எல்லையில் உள்ள பாங்காங் நதியின் சீனா கட்டிய பாலத்தில் வாகனங்கள் செல்லும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.