Home செய்திகள் இலங்கை கடற்படை ரோந்து…ஒருவர் பலி…2 பேர் காயம்…!!!

இலங்கை கடற்படை ரோந்து…ஒருவர் பலி…2 பேர் காயம்…!!!

by Sathya Deva
0 comment

ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 படகுகளின் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்தது. அவர்களை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்து படகில் அவர்களை துரத்தி சென்றனர்.

இதனால் கார்த்திகேயன் என்பவரின் படகு நடுக்கடலின் மூழ்கி மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் முத்துப்பாண்டி, மூக்கையா,ஆகியவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் ராமச்சந்திரன் என்பவர் மாயமாகி உள்ளார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதராக அதிகாரிகளை நேரில் அழைத்து சம்மன் அளித்த வெளியூறவு துறை இலங்கை கடற்படையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.