Home செய்திகள் சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்…32 பேர் பலி…!!!

சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்…32 பேர் பலி…!!!

by Sathya Deva
0 comment

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியா அல்கொய்தாவில் கிளை அமைப்பான அல் ஷபாப் மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல ஹோட்டலுக்குள் அல்ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் ஹோட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர்.

மேலும் சிலரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்தனர். தொடர்ந்து தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தர் என கூறப்படுகிறது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்த பாதுகாப்பு படையினர் அதிரடியாக செயல்பட்டு பிணைக்கைதிகளை மீட்டனர். மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.