Home செய்திகள் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீ விபத்து…மூன்று பெட்டிகள் சேதம்…!!!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீ விபத்து…மூன்று பெட்டிகள் சேதம்…!!!

by Sathya Deva
0 comment

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் மூன்று ஏசி பெட்டிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த ரயிலில் பி6, பி7, எம்1 ஆகிய மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சத்தீஸ்கரில் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.