Home செய்திகள் கலைஞரை புகழ்வது பலருக்கும் பிடிக்கவில்லை… அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!!

கலைஞரை புகழ்வது பலருக்கும் பிடிக்கவில்லை… அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!!

by Revathy Anish
0 comment

சென்னையில் நேற்று கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. மிகவும் விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மிகவும் புகழ்ந்து பேசி உள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் ராஜ்நாத் சிங் கலைஞரை பற்றி புகழ்ந்தது பலருக்கும் பிடிக்கவில்லை. மந்திரி எதற்காக கலைஞரை குறித்து புகழ்ந்து பேச வேண்டும், அவர் தன் மனதில் உள்ள உண்மையை கூறியுள்ளார்.

மேலும் கலைஞரின் பெயரிலான இந்த நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்ற தலைவர்கள் நாணயம் வெளியிடும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தான் இருக்கும். இதைக் கூட எதிர்க்கட்சி தலைவர் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பாஜக உடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. இதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் நடத்தாத அ.தி.மு.க கலைஞர் விழாவை பார்த்து ஏன் எப்படி கேள்வி கேட்கிறார்கள் என்பது புரியவில்லை என ஸ்டாலின் கூறினார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.