Home சினிமா செய்திகள் “பெரும் அன்பு உண்டாகிறது”…”வாழை படம் குறித்து நடிகர் கார்த்தி…வைரல் பதிவு…!!!

“பெரும் அன்பு உண்டாகிறது”…”வாழை படம் குறித்து நடிகர் கார்த்தி…வைரல் பதிவு…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயண இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி, ”நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும்.

ஆனால், அதை ஒரு காவியமாக படைத்து நமக்கு மிக நெருக்கமானவராய் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகிவிட்டார். இந்த படத்தில் நடிப்பு என எதையும் சொல்லிவிட முடியாது. அவ்வளவு எதார்த்தம். இந்த படத்தை பார்த்த பின் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” என சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.