Home செய்திகள் தெலுங்கானா மாநிலம்…லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி கைது…!!!

தெலுங்கானா மாநிலம்…லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி கைது…!!!

by Sathya Deva
0 comment

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாராயணகுடா துணை வணிகவரி அதிகாரியாக வசந்த இந்திரா இருந்து வருகிறார். இவர் தனி நபரிடம் அவரது நிறுவனத்தின் கணக்கில் முரண்பாடுகளை கவனிக்காமல் இருப்பதற்காக ரூபாய் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது அந்த போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்ற அந்த நபர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வசந்த இந்திராவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் என கூறப்படுகிறது. பின்பு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தி ஜெயிலில் நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.