கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஆயில்மின் தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனது நண்பரான விநாயக மூர்த்தியிடம் 300 ரூபாய் கொடுத்து மது அருந்த மதுபாட்டிலை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகமூர்த்தி அந்த பணத்தை மது வாங்காமல் வேறு செலவு செய்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பர் என்றும் பார்க்காமல் விநாயக மூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.