Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கோயம்புத்தூர் குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்… பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி… காரமடை அருகே சோகம்…!!

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்… பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி… காரமடை அருகே சோகம்…!!

by Revathy Anish
0 comment

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கு கலாமணி என்ற மனைவியும் 2 1/2 வயதில் அஸ்விக்கா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கலாமணி தனது குழந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் கணவர் மற்றும் உறவினர்கள் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கலாமணியின் செருப்பு அவரது வீட்டிற்கு அருகே உள்ள கிணறு பக்கத்தில் இருந்ததால் உறவினர்கள் கிணற்றிற்குள் பார்த்தனர். அப்போது கலாமணி மற்றும் குழந்தை பிணமாக மிதந்து கொண்டிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரமடை போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கலாமணி மற்றும் அஸ்விக்காவை மீட்டனர்.

அப்போது கலாமணி தனது உடம்போடு குழந்தையை இறுக்கமாக கட்டிக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலாமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.