Home செய்திகள் தண்ணீர் பிடிப்பதில் தகராறு… வாலிபர் கத்தியால் குத்தி கொலை… திருப்பூரில் பதற்றம்…!!

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… வாலிபர் கத்தியால் குத்தி கொலை… திருப்பூரில் பதற்றம்…!!

by Revathy Anish
0 comment

திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தில் உள்ள நூல் கடையில் டிரைவராக வேலை பார்த்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஆனந்தராஜ், காரைக்குடியை சேர்ந்த வசந்த் உள்பட 6 பேர் அதே பகுதியில் உள்ள ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தராஜுக்கும் வசந்திற்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவும் வழக்கம்போல அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் மதுபோதையில் இருந்தனர். இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த வசந்த் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஆனந்தராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை பார்த்த வசந்த் அங்கிருந்து உடனடியாக அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஆனந்தராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் தப்பியோடிய வசந்தையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.