Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கடலூர் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி… உடல் நசுங்கி பலி… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி… உடல் நசுங்கி பலி… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி வெட்டி எடுக்கும் 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல அன்பழகன் கன்வேயர் பெல்ட் அருகே வேலை பார்த்து கொண்டிருந்தபோது பெல்ட்டில் அவரது உடல் சிக்கியது.

இந்த சம்பவத்தில் அன்பழகன் உடல் நசுங்கி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அன்பழகனின் உறவினர்கள் உடனடியக 2-வது சுரங்கத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.